இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அன்பைக் காண்பிப்பது என்பது தேவனின் கிருபையைப் பகிர்ந்து கொள்வதும் மற்றவருக்கு வாழ்வளிப்பதும் ஆகும். இந்தக் கொள்கையை இயேசுவைப் போல யாரும் முழுமையாகக் விளங்கச் செய்யவில்லை ! அவருடைய தியாகம் நம்மைக் இரட்சித்தது மற்றும் தேவனிடமிருந்து புதிய மற்றும் நித்திய ஜீவனைக் கொண்டு வந்தது. இந்த அன்பை நாம் மற்றவர்களுக்குக் காண்பிக்க வேண்டுமென தேவன் விரும்புகிறார். நாம் எப்படி வாழ்கிறோம் என்பதில் அவர்கள் தேவனின் அன்பைக் காண்கிறார்கள், அன்பு அவர்களை நம் அன்பான தேவனிடம் நெருங்கி செல்ல வழிவகை செய்கிறது .

என்னுடைய ஜெபம்

பரிசுத்த தேவனே , என் பரலோகத்தின் பிதாவே , இன்று உமக்கு நன்றி செலுத்துகிறேன் . உமது கிருபையை அனுபவிக்க வேண்டிய வேறொருவருடன் என் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ள எனக்கு உதவுங்கள். காயமடைந்தவர்களைக் கவனித்து, அவர்களை அன்புடன் உம்மிடம் அழைத்துச் செல்வதற்கான சிறந்த வழியில் நடத்த எனக்கு ஞானத்தைத் தரவும். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து