இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
சபையிலே மற்றும் பிரகாரங்களில் மாத்திரம் பாடுவதோடு நிறுத்திவிடாதீர்கள். தொழுகை என்பது , நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுப்பது (ரோமர் 12:1-2; மத்தேயு 22:36-40), தேவன் இயேசுவுக்குள் நமக்காகச் செய்ததற்காக நமது மகிழ்ச்சியின் அடிப்படையில் (ரோமர் 5:6-11) செய்வதாகும் . தேவனுக்கு நன்றியையும் துதியையும் பாடி இன்றளவை மகிழ்ச்சியான பாடல்களின் நாளாக மாற்றுவோம்!
என்னுடைய ஜெபம்
அன்பான பரலோகப் பிதாவே , உம் மனித உயிரினங்களுக்கு ராகங்களை ஈவாக வழங்கியதற்காக உமக்கு நன்றி. எங்கள் இதயங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் துதி பாடல்களை எழுதவும் பகிர்ந்து கொள்ளவும் வரங்களை அநேகருக்கு கொடுத்ததற்காக நன்றி. உம் மீதான எங்கள் அன்பையும், நீர் செய்யும் யாவற்றிற்காகவும் , இன்னுமாய் நீர் எங்களுக்கு வழங்கிய ஆசீர்வாதங்களுக்காக எங்கள் மனமார்ந்த நன்றியைக் காண்பிக்க , "மகிழ்ச்சியான பாடல்களை" நாங்கள் கேட்கும்போதும், பாடும்போதும் எங்கள் துதி கீதங்களால் நீர் மகிழ்ச்சியடைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இயேசுவின் நாமத்தினாலே உமக்கு நன்றியும் புகழும் செலுத்தி ஜெபிக்கிறோம். ஆமென்.