இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
தேவனுடைய சித்தத்திற்கு நம் இருதயத்தை செம்மைப்படுத்தி, நம் ஆண்டவரைக் கனப்படுத்த நாம் ஏங்கும்போது, மாட்சிமையான வழிகளில் நம்மை ஆசீர்வதிப்பதில் நம் பிதா மகிழ்ச்சியடைகிறார். (நேற்றைய பக்தி எண்ணங்களைப் பார்க்கவும்.) எனவே, அவருடைய சித்தத்தைச் செய்வதில் முதலில் நம் இருதயத்தை அமைத்துக் கொள்வோம். அப்படியானால், தேவனின் ஆசீர்வாதங்களை மற்றவர்கள் மீது பொழிந்து , நம் இருதயத்தின் விருப்பங்களை தேவனிடம் பகிர்ந்து கொள்ளும்படி கேட்க பயப்பட வேண்டாம். இறுதியாக, நம்முடைய ஜெபங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக அவர் நம்மை எத்தனை வழிகளில் ஆசீர்வதிக்கிறார் என்பதில் ஆச்சரியப்பட வேண்டாம்!
என்னுடைய ஜெபம்
தேவனே , நீர் என்னை ஆசீர்வதிக்கும் விதத்தில் , குறிப்பாக நான் நேசிக்கிறவர்களை ஆசீர்வதிக்கும் வழிகளில், தயவுசெய்து நீர் மகிமையுடையவர் என்பதை காண்பியும் . இந்த ஆசீர்வாதங்கள் எங்களின் ஞானத்தினாலோ, திறமையினாலோ அல்லது பலத்தினாலோ அல்ல, உமது கிருபையினால் வந்தவை என்பதை எல்லா மக்களுக்கும் அறிய உதவுங்கள். இயேசுவின் நாமத்தினாலே இவை யாவற்றையும் கேட்டு ஜெபிக்கிறேன் . ஆமென்.