இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
வாழ்க்கை நம்முடையது! மரணம் இனி நம்மைச் சிறைபிடிப்பதில்லை! நம்முடைய இரட்சகரும் ஆண்டவருமான இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவன் நமக்கு ஜெயத்தை கொடுத்திருக்கிறார். வேறு என்ன சொல்லக் கூடும் ? "தேவனுக்கு மகிமை உண்டாவதாக !" "அல்லேலூயா!" "நன்றி, இயேசுவே !"
என்னுடைய ஜெபம்
இயேசுவை அனுப்பியதற்காக நன்றி, பிதாவே. அவரை மரித்தோரிலிருந்து எழுப்பியதற்காக நன்றி, சர்வவல்லமையுள்ள தேவனே . நான் உமக்காக ஊழியம் செய்யும்போது, அவருடைய வாழ்க்கை என்னுள் ஜீவனோடு இருக்கிறது என்ற உறுதிப்பாட்டிற்காக நன்றி. என் வாழ்க்கை வீணாக போகாது என்பதற்காக நன்றி. நான் என்றென்றும் ஜெய வீரனாக உம்மிடம் நித்திய வீட்டிற்குச் செல்வேன் என்ற உறுதிப்பாட்டிற்காக நன்றி! இயேசுவின் நாமத்தினாலே , உம்மைத் துதித்து, ஜெபிக்கிறேன் . ஆமென்.