இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
எல்லா ஜனங்களும் மனந்திரும்ப வேண்டும் என்று தேவன் விரும்புகிறார், இதனால் அவர்கள் அவருடைய கிருபையைப் பெற்று, அவருடைய மகிமையில் அவருடன் பகிர்ந்துகொள்ளும் சிலாக்கியத்தை பெற்றுக்கொள்ளுகின்றனர் . தேவன் நம் இரட்சிப்பை மிகவும் விரும்புகிறார், அதனால் அவர் நம்மை இரட்சிக்க இயேசுவின் மூலமாய் நம்மை வந்தடைந்தார் (யோவான் 3:16-17). நம்மை இரட்சிப்பது தேவனுக்கு நம் மீது வைத்துள்ள மாசற்ற அன்பு என்பதால், இயேசுவின் மூலம் மற்றவர்களை இரட்சிப்புக்கு வழிநடத்துவதை நாம் எப்படி நமது விருப்பமாக மாற்ற முடியாது? பிதாவிடம் திரும்புவதற்கு முன் இயேசுவின் கடைசி வார்த்தைகள், தேவனின் கிருபையின் நற்செய்தியுடன் உலகை அடைவது நமது இரட்சகரின் நமக்கான பணியாகும் என்பதை நமக்கு நினைவூட்டுகின்றன (மத்தேயு 28:18-20; அப்போஸ்தலர் 1:8)!
என்னுடைய ஜெபம்
பிதாவே, இயேசுவின் வருகையின் நாளை உம் கரங்களில் வைத்திருப்பதை நான் அறிவேன், அவர் திரும்பி வருவதற்கான காரணம் உமக்கு மட்டுமே தெரியும். இருப்பினும், அன்புள்ள பிதாவே, எல்லா மக்களும் இயேசுவை தங்கள் ஆண்டவராக அறிந்து இரட்சிக்கப்பட வேண்டும் என்று நீர் விரும்புகிறீர் என்பதையும் நான் அறிவேன். இந்த வாரம் என்னைச் சுற்றியுள்ள ஒருவருடன் உம் இரட்சிப்பின் செய்தியையும் இயேசுவின் மூலம் உம் அன்பான கிருபையின் ஈவையும் பகிர்ந்து கொள்ள என்னைப் எடுத்து பயன்படுத்துங்கள், மேலும் அது அவர் திரும்பும் நாளை விரைவுபடுத்தட்டும். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.