இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
நேர்மையாக பதில் சொல்லுங்கள்! உங்கள் பாதுகாப்பு, நம்பிக்கை மற்றும் அரனின் ஆதாரம் என்ன? கர்த்தருடைய வழி ஒரு அரண் , ஒரு பெலன் மற்றும் ஒரு பாதுகாப்பின் இடம்! நமது நீதிக்கான தேவனின் கட்டளைகளும் கோரிக்கைகளும் நமது பாதுகாப்புக்காகவும் அவருடைய மகிமைக்காகவும் என்பதை அறிந்து நம் வாழ்க்கையை வாழ்வதை உறுதிசெய்வோம். தேவனுக்கு கீழ்ப்படிதலை நமது அடைக்கலமாகப் பயன்படுத்துவோம், மேலும் கர்த்தருடைய அழைப்பையும் வார்த்தையையும் புறக்கணிப்பது அழிவை அழைப்பதாகும் என்பதை உணர்ந்து கொள்வோம்.
என்னுடைய ஜெபம்
அன்புள்ள ஆண்டவரே, உமது சித்தத்தை இன்னும் முழுமையாகக் கண்டறியவும், அதைச் சுற்றி என் வாழ்க்கையை கட்டியெழுப்ப தைரியம் பெறவும் பரிசுத்த ஆவியைப் பயன்படுத்துவீராக. நான் பொய்யான வார்த்தைகளை பின்பற்ற விரும்பவில்லை, உமது சத்தியத்திலிருந்தும் நீதியிலிருந்தும் விலகிச் செல்ல நான் விரும்பவில்லை. உமது சித்தம் எனக்கு மகிழ்ச்சியாக மட்டுமல்ல, என் அடைக்கலமாகவும் இருக்கட்டும். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.