இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் நன்மை செய்பவர்களாக இருக்க வேண்டும். இயேசுவின் சீஷர்களாக நாம் இருப்பதில் இது மிகவும் முக்கியமான ஓர் பகுதியாகும். இயேசுவினனுடைய உண்மையான சீஷரைக் கண்டுபிடிக்க விரும்புகிறீர்களா? மற்றவர்களுக்கு நல்லது செய்யும் ஒருவரைக் கண்டுபிடியுங்கள் ! எனவே, இயேசுவின் நாமத்தினால் மற்றவர்களை ஆசீர்வதிக்க தேவனானவர் நம் பாதைகளில் வைக்கும் பல வாய்ப்புகளைத் கண்டுப்பிடிப்போம் . மற்றவர்களை ஆசீர்வதிக்கவும், பரலோகத்தின் தேவனை மகிமைப்படுத்தவும் நம்முடைய எல்லா ஆசீர்வாதங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்துவோமாக !

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , எங்களின் மனதுருக்கம் , அக்கறை, நற்செயல்களின் மூலமாக உமது நற்குணமும் மற்றும் கிருபையையும் வெளிப்படுவதைக் பார்க்க வேண்டிய, எங்களைச் சுற்றியுள்ள அப்படிப்பட்டவர்களை பார்க்கக் நல்ல தெளிவுள்ள கண்களையும் எங்களுக்குத் தந்தருளும். நற்காரியங்களை செய்யும்படியான உதாரத்துவமுள்ள இருதயத்தை எங்களுக்கு தந்து உதவுமாறு இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறோம். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து