இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் போர்களத்தில் இருக்கிறோம்! நாம் அனுதின வாழ்வில் அநேக போரட்டங்களை சந்திக்கிறோம் , அந்த போராட்டங்கள் பாவம் மற்றும் சோதனையுடன் மாத்திரமல்ல . நம் அழிவை விரும்பும் மெய்யான சத்ரு நமக்குண்டு. ஆனால், நம் சத்ருவானவன் ஏற்கனவே தோற்கடிக்கப்பட்டான், அவனுடைய தூதர்கள் கண்டிக்கப்படுகிறார்கள். எனவே, நாம் சபையிலே விளையாட வரவில்லை , ஆனால் நாம் யாவரும் ராஜ்யத்திற்காக போராடுகிறோம் என்பதை அறிந்து, நமது ஆத்தும வீரியத்தை எப்பொழுதும் உறுதியாக வைத்திருப்போம். கர்த்தருடைய மாதிரி ஜெபத்தில் கீழ்க்கண்டவாறு ஜெபிக்க இயேசு நமக்குக் கற்றுக் கொடுத்ததில் ஆச்சரியமில்லை: எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே." (மத்தேயு 6:13). ஆம், நாம் தீயவனுடன் - அவனது பொய்களுக்கும், நம்மை அழிக்கும் அவனது விருப்பத்திற்கும் எதிராக போரிடுகிறோம். ஆனால் நாம் நம்பிக்கையுடன் தைரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க முடியும், ஏனென்றால் நம்முடைய கர்த்தர் பொல்லாங்கனையும், நம் உலகத்தின் மீதான அவரது தீய பிடியையும் முன்னமே வென்றிருக்கிறார் (யோவான் 16:33; கொலோசெயர் 2:15).

Thoughts on Today's Verse...

We are at war! We face daily battles, and those struggles are not just with sin and temptation. We have a real foe who desires our destruction. But, our enemy has already been defeated, and his angels stand rebuked. So, let's keep our spiritual vigor, knowing that we're not playing church, but we are fighting for the Kingdom. No wonder Jesus taught us to pray the following in the Lord's model prayer: "And lead us not into temptation, but deliver us from the evil one" (Matthew 6:13). Yes, we are at war with the evil one — against his lies, and his desire to destroy us. But we can be confidently courageous and joyous because our Lord has overcome the evil one and his malevolent grip on our world (John 16:33; Colossians 2:15).

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள மற்றும் ஜெயத்தின் ராஜாவே, பாவம், மரணம், நரகம் மற்றும் தீயவற்றை எங்களுக்காக வென்றதற்காக நான் உம்மைப் போற்றுகிறேன். உமது வெற்றிகரமான தியாகத்தின் மூலம் எங்களை நீதிமான்களாகவும் பாவமில்லாதவர்களாகவும் மாற்றினீர்கள், உம்முடன் எங்கள் வெற்றியை உறுதிப்படுத்துகிறீர்கள். நன்றி, ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறோம் ! ஆமென்.

My Prayer...

Almighty and Victorious King, I praise you for conquering sin, death, hell, and the evil one for us. You have made us righteous and sinless through your victorious sacrifice, ensuring our victory with you. Thank you, Lord Jesus! Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of எபேசியர் - Ephesians 6:12

கருத்து