இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் ஒரு ஆவிக்குரிய போரில் இருப்பதால், நாம் நம்முடைய ஆவிக்குரிய சர்வாயுதவர்க்கத்தை தரித்துக்கொள்ள வேண்டும். நம்முடைய தினசரி ஜெபங்களைச் செய்வதற்க்கு மேலாகவும் , நாம் தினசரி வேதாகமத்தை தவறாமல் வாசிப்பதை காட்டிலும் , பின்வரும் வசனங்களில் பவுலானவர் விவரிக்கும் (எபேசியர் 6:13-20) தேவன் நமக்குக் கொடுத்திருக்கும் ஆவிக்குரிய சர்வாயுதவர்க்கத்தை அடையாளம் காண நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த ஆவிக்குரிய சர்வாயுதவர்கம் , நாம் ஆத்துமப் போருக்குத் தயாராவதற்கு உதவுவதற்காகவும் மற்றும் நமது ஆத்தும பாதுகாப்பிற்காகவும் கொடுக்கப்பட்டுள்ளது . நாம் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பணியையும், ஒவ்வொரு வேதாகம வார்த்தைகளையும் , ஒவ்வொரு சவாலையும் அவசர உணர்வுடன் அணுக வேண்டும், ஏனென்றால் நாம் போரில் ஈடுபட்டுள்ளோம் என்பதை அறிந்திறுக்கிறோம் . தீய நாள் வரும். பொல்லாங்கன் நமக்கு எதிராகத் தன் தாக்குதல்களில் சிலவற்றை நம் இருதயத்தில் ஊடுருவி உள்ளே செல்ல முயல்வான் . எனவே, தேவன் அளித்துள்ள சர்வாயுதவர்க்கத்தையும் அவர் அளிக்கும் வல்லமையையும் பயன்படுத்தி நாம் எதிர்த்து நிற்க்க எப்பொழுதும் தயாராக இருப்போம்.

Thoughts on Today's Verse...

Since we are in a spiritual war, we must put on our spiritual armor. More than saying our daily prayers and perfunctorily reading our daily Scriptures, we must learn to recognize the spiritual armor God has given us that Paul details in the following verses (Ephesians 6:13-20). This spiritual armor is for our spiritual protection to help us prepare for spiritual warfare. We should approach each day, each task, each Scripture, and each challenge with a sense of urgency because we know we are at war. The day of evil will come. The evil one will get some of his attacks against us to penetrate our hearts. So, let's be ready to take our stand using the tools God has supplied and the power he provides.

என்னுடைய ஜெபம்

அன்பான பரலோகத்தின் தகப்பனே, உமது பரிசுத்த ஆவியினால் என்னைப் பெலப்படுத்துங்கள் (எபேசியர் 3:14-21). உம்முடைய பரலோக அழைப்பின் காரணமாக நான் உமக்கு தைரியமாக ஊழியம் செய்ய விரும்புகிறேன். இயேசுவின் மாதிரியை மற்றும் தீயவர்மீது அவர் தொடர்ந்து ஜெயம் பெற்றதன் காரணமாக ஆவிக்குரிய ரீதியில் இன்னும் தைரியமாக இருக்க அவைகள் அடியேனை உற்சாகப்படுத்துகிறது . அவருடைய வல்லமையுள்ள நாமத்தினாலே ஜெபம் செய்கிறேன். ஆமென்.

My Prayer...

Dear Father in Heaven, please empower me with your Holy Spirit (Ephesians 3:14-21). I want to boldly serve you because of your heavenly calling on me. Please inspire me to be spiritually courageous because of Jesus's example and his repeated triumphs over the evil one. In his name, I pray. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of எபேசியர் - Ephesians - 6:13

கருத்து