இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் பூக்களுக்கு அழகையும், புல்லுக்கு ஜீவனையும் தருகிறார். இந்த உலகமும் அதில் உள்ள யாவும் உண்டாக்கப்பட்ட பெரும் திட்டத்தில், இவை மாறக்கூடியவை மற்றும் அற்ப்பமானவை . நம்மைக் இரட்சிப்பதற்காக அவர் தம்முடைய நேச குமாரனை பரலோகத்திலிருந்து பூமிக்கு அனுப்பினார், எனவே அவருடன் வாழ நாம் நித்திய வீட்டிற்குச் செல்லும் வரை அவர் நிச்சயமாக நமக்குத் தேவையான யாவற்றையும் கொடுப்பார்! தேவனோடு வாழப்போகும் உலகில் உள்ள அழகை நினைத்துப் பார்த்து, இந்த பூமிக்குரிய உலகில் உள்ள விஷயங்களை விட அதிகமாக நம்மை நேசிக்கிறார் என்பதை நினைவுப்படுத்திக்கொள்ளுவோம் , மேலும் நம்மைத் நிலைநிறுத்தி அவருடைய நித்திய வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக உறுதியளித்தார்!

என்னுடைய ஜெபம்

அன்பான பிதாவே சர்வவல்லமையுமுள்ள தேவனே , நிலையற்ற விஷயங்களில் ஏற்படும் எனது கவனச்சிதறல்களுக்காக , குறிப்பாக அவை என்னை கவலை மற்றும் அவநம்பிக்கைக்கு அழைத்துச் செல்லும் நேரங்களுக்காக அடியேனை மன்னித்தருளும் . இயேசுவுக்குள் எனக்குத் தேவையான யாவற்றையும் நீர் எனக்குக் கொடுப்பீர் என்று முழுநிச்சயமாய் நம்புகிறேன், மேலும் உம் கிருபையின் ஆசீர்வாதங்கள் என் வாழ்க்கையில் ஊற்றப்பட்டுள்ளது. இயேசுவின் விலையேறப் நாமத்தினாலே , உம்மை மேலும் நம்புவதற்கான பெலத்தை நான் கேட்டு ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து