இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பழைய ஏற்பாட்டின் நாட்களில் ஒரு அந்நிய ராஜா நம் தேவன் எவ்வளவு மகத்துவமுள்ளவர் மற்றும் மகிமை வாய்ந்தவர் என்பதை அடையாளம் காண முடியுமானால், நிச்சயமாக இயேசுவின் மூலமாய் அவருடைய கிருபையைப் பெற்ற நாம் அவரைப் பற்றி களிகூறலாம் இன்னுமாய் அவரைப் போற்றி துதிக்கலாம்! நம்முடைய தேவன் ஜீவனுள்ள தேவன், மற்றும் சதாகாலங்களிலும் நிலைத்திருப்பவர். அவர் நம்மை ஒருபோதும் அழிக்கவோ, அசைக்கவோ முடியாத தம்முடைய ராஜ்யத்திற்குள் கொண்டுவந்தார். நம்முடைய தேவன் , சர்வவல்லமையுள்ள தேவன் அவரே நம்மை பாதுகாத்து, இரட்சிக்கிறவர். அவர் தம் மக்களுக்கு அடையாளங்கலினாலும், அற்புதங்களினாலும் மீட்பைக் உண்டுப்பண்ணி , அவரை இன்னும் அறியாதவர்களுடன் அவருடைய கிருபையைப் பகிர்ந்து கொள்ளவும் செய்கிறார்.

என்னுடைய ஜெபம்

பிதாவாகிய தேவனே , நீர் மகிமையானவர் மற்றும் அற்புதமானவர். உம்முடைய ஆளுகை மெய்யானது , நீதியானது, நித்தியமானது. நீர் உம் வாக்குத்தத்தங்களை நிறைவேற்றி இன்னுமாய் உம் ஆசீர்வாதங்களை உதாரத்துவமாக பொழிகிறீர் . நீர் ஒருவரே மெய்யாகவே பரிசுத்தமானவர், உம் மகிமையிலும் வல்லமையிலும் அற்புதமானவர். என் ஆண்டவரே, இயேசுவின் நாமத்தினாலே நான் உம்மைப் போற்றி நன்றி கூறி, ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து