இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம்மில் பெரும்பாலோர் கற்றுக்கொள்ள வேண்டிய அதே பாடத்தை மோசேவானவரும் கற்றுக்கொள்ள வேண்டியதாயிருந்தது: எல்லோரும் உண்மையில் நாம் என்ன சொல்கிறோம் என்பதைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. நாம் சத்தியத்தை அறிந்திருந்தும் , நம்மில் பெரும்பாலோர் அதை அவ்வளவு நன்றாக வெளிப்படுத்த முடியாது. ஏனென்றால் மற்றவர்களுடன் தொடர்புகொள்வது கடினமான ஒன்றாகும் . இருப்பினும், நாம் கர்த்தருக்கு நம்மை அர்ப்பணிக்கும்போது, ​​அவர் உண்மையிலேயே நம் மூலம் கிரியை செய்து மற்றும் நம்மை வல்லமையுள்ள வழிகளில் எடுத்துப் பயன்படுத்துகிறார். மந்தவாய் உள்ளவன் மோசே, ஆனால் தடுமாற்றமான பேச்சை உடைய ஒரு மேய்ப்பனை தேவன் அழைத்துச் சென்று அவரை எல்லா காலத்திலும் சிறந்த தலைவராகவும் மற்றும் சிறந்த பேச்சாளர்களில் ஒருவராகவும் மாற்ற முடியும் என்பதற்கு ஒரு சிறந்த சாட்சி மோசேயானவர் . தேவன் நம்முடன் என்ன செய்ய விரும்புகிறார் என்று கேட்டு அதைச் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லையா? மோசேயானவருக்கு வரம்புகள் இருந்தபோதிலும் தேவன் அவனை பலமாகப் பயன்படுத்தினார், மேலும் தேவன் நம்மை சக்திவாய்ந்த வழிகளிலும் பயன்படுத்த விரும்புகிறார் என்று நான் முழு நிச்சயமாய் நம்புகிறேன்!

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பிதாவே , தயவுசெய்து என்னை உம்முடைய ஊழியத்தில் அதிகமாய் எடுத்து பயன்படுத்துங்கள். எனது ஈவுகள் , திறன்கள் மற்றும் அனுபவங்கள் அனைத்தும் உம்மிடமிருந்து வந்தவை என்பதை நான் முழுமையாய் அறிவேன். எனது அனைத்து திறன்களும் எனக்கு அளிக்கப்பட்டதின் நோக்கம் என்னவென்றால் , அதினால் நான் உம்மை புகழ்ந்து போற்றி மற்றவர்களை உம்மிடம் அழைத்துச் வர முடியும். எனவே, உனது மகிமைக்காக எனது திறன்களைப் பயன்படுத்த எனக்கு உதவிச் செய்யும் ! இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து