இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அவரை அறிந்தவர்களின் குரல்களில் இருந்து, செய்தி தெளிவாகிறது! தேவன் சதாகாலங்களிலும் ராஜரீகம் பண்ணுகிறார் , அவருடைய சட்டத்தின் மூலமாய் நமக்கு இரட்சிப்பு வருகிறது. ஏனென்றால், தேவனுடைய ஆட்டுக்குட்டியாகிய இயேசுவானவர், அந்த மேசியா மரிப்பதற்கு ஆயத்தமாக இருந்தார். ஆயினும்கூட, இயேசு தம்முடைய தியாக பலியின் மரணத்தின் மூலமாய் , மரணம், பாவம், சாத்தான் மற்றும் நரகத்தை நமக்காக ஜெயித்தார் . இயேசுவின் உண்மையுள்ளவராய் இருப்பதினால் , "உலகின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியாக" அவர் செய்த கிரியையினாலும் , அவர் திரும்பி வரும்போது, ​​நாம் அவருடன், மகிமையுள்ள வாழ்க்கையை என்றென்றும் பகிர்ந்துகொள்வோம் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம்.

என்னுடைய ஜெபம்

அன்பான பிதாவே சர்வவல்லமையுள்ள தேவனே , இயேசுவுக்குள் உம்முடைய கிருபையினால் எங்களுக்கு இரட்சிப்பை வழங்கியதற்காக நன்றி. இயேசுவே, எங்கள் பாவங்களுக்காக பலியிடப்பட்ட ஆட்டுக்குட்டியாக உம்மையே ஒப்புக்கொடுத்ததற்காக நன்றி. தேவதூதர்கள், முன்னோர்கள் , உம்முடைய சிங்காசனத்தை சுற்றியுள்ள மூப்பர்கள் மற்றும் தேவனுக்கு முன்பாக மற்ற விசுவாசமுள்ள கிறிஸ்தவர்களுடன் உம்மை போற்றி புகழ்ந்துகொண்டு முகமுகமாய் பார்ப்பதற்காக நாங்கள் உம்முடைய குமாரனுடைய வருகையை எதிர்நோக்குகிறோம். தேவனே , உமக்கும் , ஆட்டுக்குட்டியானவருக்கு எல்லாப் புகழும், கனமும், மகிமையும், நன்றியும், இப்போதும் என்றென்றும் சாதகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து