இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சுமார் சில பத்துஆண்டுகளுக்கு முன்பு, ஜுவான் கார்லோஸ் ஓர்டிஸ் என்ற ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சுவிசேஷகர்களை ஒரு கேரட் மற்றும் குச்சி நற்செய்தியை வழங்குவதற்காக விமர்சித்தார் - இது இயேசுவைப் பின்பற்றுவதற்கான நமது தனிப்பட்ட பலனை மையமாகக் கொண்ட ஒரு நற்செய்தி, நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் இயேசுவை ஆண்டவராக ஏற்றுக்கொள்ளுவது இல்லை . இயேசு, குறிப்பாக மத்தேயு 7ஆம் அதிகாரத்தில் , கிருபை சீஷத்துவத்தை நிராகரிக்கவில்லை , உண்மையான மனந்திரும்ப வேண்டிய தேவையிலிருந்து இரக்கம் நம்மை விடுவிக்காது என்பதை நமக்கு நினைப்பூட்டுகிறது. உண்மையான மனந்திரும்புதல் நம் பாவத்தை குறித்து கவலைப்படுவது மாத்திரமல்ல - அது மனந்திரும்புவதற்கு வழிவகுக்கும் தேவனுக்கேற்ற துக்கம் (2 கொரிந்தியர் 7:9-11). மனந்திரும்புதல் என்பது நாம் எப்படி வாழ்கிறோம் என்பதை மாற்றிக்கொண்டு இன்னுமாய் இயேசுவுக்காக முழுமையாக வாழ்வதைத் தேர்ந்தெடுப்பதாகும். இயேசுவானவரை தேவனானவர் நமக்குக் கிருபையாய் கொடுத்திருக்க அதை நாம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறோம், ஆகையால் உண்மையாகவே இயேசு நம் வாழ்வின் ஆண்டவராக இருக்கட்டும். இது "ஒன்று-அல்லது" முன்மொழிவு அல்ல, ஆனால் தேவனின் "இரண்டும்" அழைப்பு. நாம் கிருபையைப் பெற்று, கீழ்ப்படிதலுடன் இயேசுவை ஆண்டவராகப் பின்பற்றுகிறோம். நாம் தேவனுக்குக் கீழ்ப்படிந்து ஊழியம் செய்கிறோம், ஏனென்றால் அவர் நம்மை சுவீகாரபுத்திரராக தத்தெடுத்து அவருடைய குடும்பத்தில் கொண்டுவந்தார். நல்ல காரியங்களைச் செய்வதற்கான நமது உந்துதல், நமது இரட்சிப்பைப் பெறுவதற்காக அல்ல, மாறாக நமக்கு மிகவும் நன்மை செய்து, அவருடைய இரக்கத்தினாலும் கிருபையினாலும் பெரும் செலவில் நம்மைக் காப்பாற்றிய தேவனுக்கு நன்றி மற்றும் கனம் செலுத்துவதாகும் (எபேசியர் 2:8-10).

என்னுடைய ஜெபம்

சர்வ வல்ல தேவனே , நீர் மகத்துவத்திலும் வல்லமையிலும் பரிசுத்தமானவர், அற்புதமானவர், உமது கிருபைக்கு நான் ஒருபோதும் தகுதியானவனாக இருக்க மாட்டேன் என்று எனக்குத் தெரியும். சீஷத்துவத்தின் பாதையிலிருந்து என் மாம்சத்தை எளிதில் கவர்ந்துவிட முடியும் என்பதை நான் அறிவேன். எனவே, தந்தையே, நான் இயேசுவைப் பின்பற்றி அவருக்குக் கீழ்ப்படிந்து வாழ முயலும்போது எனக்கு ஆவியானவர் உதவி செய்ய வேண்டும். அவர் பெயரில், நான் ஜெபம் செய்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து