இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பரலோக ராஜ்யம் தேவனுடைய பரிசுத்தவான்களுக்கும், அவருடைய பிள்ளைகளுக்கும், இயேசுவைப் பின்பற்றுகிறவர்களுக்கும், உன்னதமானவருடைய மக்களுக்கும் என்றென்றும் சொந்தமானது! (தானியேல் 7:27) பரலோக ராஜ்யம் நமக்கே சொந்தமாகும். மனுஷகுமாரன் அங்கே நம்மோடு நித்தியக்காலமாக இருப்பார் (தானியேல் 7:13), மற்றும் பரலோக ராஜ்யம் நம்முடையதாக என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் இருக்கும் .... அவருடைய வாக்குத்தத்தங்களுக்காகவும், அவருடைய கிருபைக்காகவும், அவர் உண்மையுள்ளவராக இருப்பதற்காகவும் தேவனை துதியுங்கள். தேவனுடைய வாக்குத்தத்தங்கள் மற்றும் பாவம், மரணம் மற்றும் நரகத்தினின்று இயேசுவின் ஜெயத்தின் காரணமாக, நமது வரம்புக்குட்பட்ட மனிதக் கண்ணோட்டத்தில் எதிர்காலம் எவ்வளவு பயமுறுத்துவதாக இருந்தாலும், நம்முடைய எதிர்காலம் மிகவும் பாதுகாப்பானதாகும் !

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , உமது ராஜ்யம் அதிகாரத்தில் ஆட்சி செய்யும் நாளை நான் எதிர்நோக்குகிறேன், மேலும் உமது சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல இந்தப் பூமியிலும் செய்யப்படும். நீர் எங்களுக்கு அளித்த வாக்குறுதிகளுக்காகவும், உம்முடைய பிள்ளைகளுக்கு அசைக்க முடியாத ராஜ்யத்தைக் கொடுக்கபோவதற்காகவும் உமக்கு நன்றி (எபிரேயர் 12:28). தேவனே , நான் ஒவ்வொரு நாளும் உமது அற்புதமான பரிசுத்தம் மற்றும் கிருபையின் மீது பயபக்தியோடும் பிரமிப்புடனும் என் வாழ்க்கையை வாழ முற்படுகையில், இயேசுவுக்குள் நீர் எனக்கு அளித்த எதிர்காலத்தின் வாக்குறுதிகளை நம்பி ஜீவிக்கிறேன் , அவருடைய வல்லமையுள்ள நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து