இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நிரபராதிகள் வன்முறையினாலும் மற்றும் இரத்தக்களரிகளாலும் பாதிக்கப்படும்போது தேவன் அவைகளை முற்றிலுமாய் வெறுக்கிறார். தேவனானவர் தீமையையும் அரசியல் ஊழலையும் அறவே வெறுக்கிறார். தவறான நீதிமன்றங்களையும், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் தலைவர்களையும் அவர் அருவருக்கிறார் . தேவன் தம்முடைய உண்மையுள்ள சீஷர்களை விடுவிப்பார் என்றும், தங்கள் பதவிகளைத் துஷ்பிரயோகம் செய்து மற்றவர்களுக்குத் தீங்கு செய்தவர்களுக்கு இறுதி நீதியை வழங்குவார் என்றும் நாம் உறுதியாக நம்பலாம். தேவனுடைய உண்மையும் நீதியும் எப்பொழுதுமே வெல்லும்!

என்னுடைய ஜெபம்

பிதாவே , வன்முறை, ஊழல், துன்மார்க்கம், துஷ்பிரயோகம் செய்பவர்களுடன் உமது நீதி இறுதியில் நிறைவேற்றப்படும் என்று எனக்கு வாக்களித்ததற்காக உமக்கு நன்றி. உம்முடைய நித்திய நாளின் நீதி நிறைவேறும் வரை நம்பிக்கையுடன் காத்திருக்கத் தேவையான பொறுமையை உம்முடைய ஜனங்களுக்கு தாரும். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து