இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

புதிய ஏற்பாட்டில் அடிக்கடி மீண்டும் மீண்டும் சொல்லப்படும் இந்த கருப்பொருள் இயேசுவின் உதடுகளிலிருந்தும் இன்னுமாய் அப்போஸ்தலனாகிய பவுலால் மீண்டும் கற்பிக்கப்பட்டது. தற்காலிகமானவற்றிற்காக மட்டுமே, நாம் நம் வாழ்க்கையை செலவிடக்கூடாது என்பதை இது நமக்கு நினைப்பூட்டுவதாக இருக்க வேண்டும். நாம் இயேசுவிலும் அவருடைய ராஜ்யத்திலும் முதலீடு செய்ய வேண்டும், ஏனென்றால் மற்ற எல்லா ராஜ்யங்களும், கட்டமைப்புகளும், தேசங்களும், அதிகாரங்களும் இறுதியில் மறைந்து , என்றென்றும் ஒழிந்துப்போம். இயேசுவிலும் அவருடைய ராஜ்யத்திலும் நாம் முதலீடு செய்வது மட்டுமே என்றென்றும் நிலைத்திருக்கும்!

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , அல்பாவும் ஒமேகாவும் , நித்தியமான தேவனுமாகிய நீர் , இவ்வுலகில் உள்ள அனைத்து தேவர்களைக் காட்டிலும் உம்முடைய மகிமை பெரிதாய் இருப்பதற்காக உமக்கு நன்றி கூறுகிறோம். நித்தியத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களுக்கு எங்கள் இருதயங்களை அனல் மூட்டி எழுப்புங்கள் மற்றும் அடிக்கடி நம்மை கவர்ந்திழுக்கும் தற்காலிக விஷயங்களை பகுத்தறிந்து காண எங்கள் மனக் கண்களைத் திறந்தருளும் . இயேசுவின் நாமத்தினாலே இந்த உதவியை வேண்டி நிற்கிறோம். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து