இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் எப்படி வாழ்கிறோம் என்பதன் மூலம் நம் வாழ்க்கையை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதைக் காண்பிக்கிறோம் . நாம் தேவனுடைய புத்திரராய் வாழ்கிறோமா? அப்படியானால் நாம் பரிசுத்த ஆவியானவருக்கு முற்றிலுமாய் ஒப்புவித்து வாழ்கிறோம் என்பதை காண்பிக்கிறோம்! பிதாவின் புத்திரர்களாகிய நாம் நம்முடைய உறவை நம் உலகில் அவருடைய குணாதிசயத்தோடே வாழ்வதன் மூலம் அதை நிரூபிக்கிறோம் . நாம் ஆவியின் கனிகளை நம்முடைய வாழ்க்கையில் காண்பிக்கும்போது (கலாத்தியர் 5:22-23) நம்முடைய மூத்த சகோதரனாகிய இயேசுவைப் போல மறுரூபமாகிறோம் (ரோமர் 8:14-17; எபிரேயர் 2:14-18) அப்படி மாறுவதற்கு (2 கொரிந்தியர் 3:18) பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவுவார் என்று முழுநிச்சயமாய் விசுவாசிக்கிறோம் . எனவே, பரிசுத்த ஆவியின் கட்டுப்பாட்டின் கீழ் எப்பொழுதுமே வாழ்வோம் - பரிசுத்த வேதாகமத்தில் உள்ள பரிசுத்த ஆவியின் மூலமாய் ஏவப்பட்ட வார்த்தைக்கு முற்றிலுமாய் கீழ்ப்படிந்து, நம் அனுதின வாழ்வில் ஆவியானவரின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவோம். இந்த வழியில் செல்லும்போது , நாம் சொல்லாலும், கையிட்டு செய்யும் எல்லாவற்றிலும் இயேசுவைக் காண்பித்து பகிர்ந்து கொள்ள ஏதுவாகும் !

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பிதாவே , என் வாழ்வில் இயேசுவின் அழகையும், கிருபையையும் , பரிசுத்தத்தையும் காண்பிக்க எனக்கு உதவிச் செய்யும் . ஒவ்வொரு நாளும் நான் கையிட்டு செய்யும் எல்லாவற்றிலும் பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதல், வல்லமை மற்றும் பெலனை நான் வெளிப்படுத்த வழி செய்யும். இயேசுவின் நாமத்தினாலும் அவருடைய அதிகாரத்தின் மூலமாய் நான் ஜெபிக்கும்போது இந்த கிருபையை கேட்டு பெற்றுக்கொள்ளுகிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து