இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

"வாழ்க்கை வலிகள் நிறைந்தது தான்... உங்களிடம் இதை தவிர வித்தியாசமாகச் சொல்பவன் வேறு எதையோ விற்க முயல்கிறான் ." இந்த வரி மிகவும் துல்லியமானது. இருப்பினும், நித்தியமான வாழ்க்கையை பார்க்கும்போது இந்த வார்த்தை துல்லியமாக இல்லை! இயேசுவைப் பின்பற்றுபவர்களுக்குச் வரும் காலங்களில் நன்மையான நாட்கள் காத்திருக்கின்றன, அந்த நாட்கள் நம் கற்பனைக்கு அப்பாற்பட்டவை மற்றும் மிகச் சிறந்தவை. அவருடைய கிருபையினால் அடியேன் அவருடைய முகத்தைப் தரிசிக்கும் போது, ​​​​அதுவே எனக்கு மகிமையும் , சந்தோஷமும் , ஆனந்த பாக்கியமாகும் ."

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே, நீர் எனக்காகக் உண்டுப்பண்ணி காத்திருக்கும் உன்னதமான கிருபையின் சிறந்த உணர்வை வெகு தொலைவில் இருந்து எதிர்பார்க்கும் தைரியத்தையும் பார்வையையும் எனக்குக் தயவுக்கூர்ந்து தாரும் . இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன், ​​தற்போதுள்ள எல்லா துன்பங்களையும் முக்கியமற்றதாக ஆக்கும் - உம்மிடமும், அந்த மகிமையிலும் என்னை நித்திய வீட்டிற்கு கொண்டு வர நீர் கிரியை செய்கிறீர் என்று நான் முழு நிச்சயமாக நம்ப விரும்புகிறேன். இயேசுவின் நாமத்தினாலே , அந்த நாளை எதிர்நோக்கி ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து