இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவைப்படுகிற மற்றவர்களுக்கு, குறிப்பாக நம்முடைய கிறிஸ்தவக் குடும்பத்தின் அங்கத்தினருக்கு உதவி செய்வதில் உதாரத்துவமாக இருக்க விரும்புகிறோம். தாராள மனப்பான்மை, தேவனின் அன்பான ஈவுகள் நம் இருதயங்களை எவ்வளவு ஆழமாகத் தொட்டுள்ளன என்பதை பிரதிபலிக்கிறது. அதே சமயம், மற்றவர்களை ஆசீர்வதிக்க இந்த தர்ம பணத்தை வழங்குவதில் உக்கிரான பொறுப்பில் உள்ளவர்கள், அப்போஸ்தலர் பவுலின் முன்மாதிரியையும் அழைப்பையும் கவனமாக கவனிக்க வேண்டும். இயேசுவின் நாமத்தில் மற்றவர்களை ஆசீர்வதிக்கும் முயற்சிகளுக்காக தேவனுடைய மக்கள் வழங்கிய நிதியைக் கையாளும் விதத்தில் தேவனின் ஊழியர்கள் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் "கர்த்தருக்கு முன்பாகமாத்திரமல்ல, மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்வதற்கு மிகுந்த சிரத்தை" எடுக்க வேண்டும்.

என்னுடைய ஜெபம்

பிதாவே , தேவைப்படுபவர்களுக்கு உதவுவதற்கு மிகவும் தாராள மனப்பான்மை கொண்ட உமது மக்களுக்காக நன்றி. உம் ஆசீர்வாதங்களுடன் எங்களிடம் தாராளமாக இருப்பதற்காக நன்றி. அந்த ஆசீர்வாதங்களை எங்களிடம் ஒப்படைத்ததற்காகவும் நன்றி, அதனால் நாங்கள் அவற்றை நன்மைக்காகப் பயன்படுத்தலாம். அதே சமயம், அன்பான பிதாவே , உமது பிள்ளைகள் போல் வேஷம் போட்டுக்கொண்டு, உம்மிடமிருந்தும், உம் மக்களிடமிருந்தும், உம் ஆசீர்வாதம் தேவைப்படும் ஏழைகளிடமிருந்தும் திருடும் கயவர்களையும், பணக் கொள்ளைக்காரர்களையும் சமாளிக்க எங்களைத் ஏவியருளும் . இத்தகைய அன்பளிப்புகளுக்குப் பொறுப்பான ஊழியர்களும் , அவற்றைத் தாராளமாக வழங்குபவர்களும், உம் ஊழியத்தைச் செய்வதற்கும், உம் கிருபையைப் பகிர்ந்து கொள்வதற்கும் இந்த வளங்களைப் பயன்படுத்தும்போது, ​​அனைவரின் பார்வையிலும் நாங்கள் மதிப்புள்ளவர்களாகவும்,பரிசுத்தமாகவும் இருப்போம். எங்கள் கர்த்தர் மற்றும் கிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபிக்கிறோம். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து