இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

வாழ்க்கை சில வேளைகளில் மிகவும் கடினமாக இருக்கும். நீண்ட காலம் இவ்வுலகில் வாழ்ந்த எவருக்கும் இது தெரியும். அதே சமயம், நமது மோசமான சோதனைகள் கூட நமது பெரும் மீட்புக்கான காலகட்டங்களாகும். நம்முடைய தனிமையான தருணங்களே எல்லா காலங்களுக்கும் ராஜாவின் சமூகத்தில் இறுதியான புத்திரசுவிகாரம் பெற காத்திருக்கும் நேரமாகும் . ஆவியானவர் நமக்குள் வாழ்வதால், நம் வாழ்வின் இறுதி இலக்கை நாம் உறுதிசெய்கிறோம், நம்முடைய அப்பா பிதாவே நம் நித்திய வீடாகும் ! நம் வாழ்க்கை ஜீவியத்தில் தற்போதைய காட்சி நம்மை எந்த இடத்தில் வைத்தாலும், நம்முடைய இறுதி இலக்கை உறுதிப்படுத்தியவர்களாக எப்பொழுதும் வாழ்வோம். நாம் நம்பிக்கை இல்லாதவர்கள் அல்ல, தங்கள் வீட்டை உருவாக்கி, நமது அழிந்து வரும் இவ்வுலத்தில் இங்கேயும் இப்போதும் உள்ள யதார்த்தத்தில் உள்ளவற்றில் தங்கள் நம்பிக்கையை வைப்பவர்கள் அல்ல. எவ்வாறாயினும், எங்களைப் பொறுத்தவரை, எங்கள் சிறந்த நாட்கள் பரலோகத்தின் தேவனுடன் புதிய வானங்களும் மற்றும் புதிய பூமியுடன் எப்போதும் உள்ளன.

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள மற்றும் மெய்யான தேவனே , எங்கள் அன்பான அப்பா பிதாவே , எத்தகைய தடைகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் தைரியத்தை கொடுத்து இன்று எங்களை ஆசீர்வதிப்பீராக. கிருபையுடனும், கண்ணியத்துடனும், உத்தமத்துடனும் வாழ எங்களுக்கு ஆவிக்குரிய பெலன் தாரும் , அதனால் மற்றவர்கள் எங்கள் விசுவாசத்தையும், நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் காண முடியும். மரணம், சிதைவு, அழிவு போன்ற அடிமைத்தனத்திலிருந்து நம் சரீரத்தையும் உலகத்தையும் பரிசுத்த ஆவியானவர் முழுமையாக மீட்டெடுக்கும் அந்த மகத்தான நாளில், அவர்களும் உம்மை அறிந்துகொண்டு எங்களுடன் உமக்கு மகிமையைக் கொண்டுவர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் யாவரும் நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புடனும் காத்திருக்கிறோம், இவை யாவற்றையும், இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறோம். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து