இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பரிசுத்த வேதாகமத்தில் உள்ள முக்கியமான சொற்றொடர், நமது மொழிபெயர்ப்புகளால் ஓரளவு மறைமுகமாக சொல்லப்படுகிறது : "நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள்" என்று யோவான் எப்பொழுதும் சொல்வது போலவே, அவர் ஒரு எளிய சொற்றொடரைப் எடுத்து , அதை முழுவதுமாக அர்த்தத்துடன் நிரப்புகிறார், மேலும் இயேசுவை வியத்தகு முறையில் புதிய வழியில் பார்க்க நம்மை வழிநடத்துகிறார். இயேசுவே நான் (யாத்திராகமம் 3:13-14 — யோவான் நற்செய்தியில் இயேசுவின் ஏழு முறை "நான்" என்ற வார்த்தையை பார்க்கிறோம்.) இயேசு மனித மாம்சத்திலே வெளிப்பட்டார். அவரே தேவன் நம்மோடு இருக்கிறார் (யோவான் 1:14-18; எபிரேயர் 1:1-3). தேவன் எப்படி நம்மை மிகவும் நேசிக்கிறார், நம்முடன் இம்மானுவேலாக, தேவன் நம்மிடம் வர முடிந்தது? (மத்தேயு 1:23) தேவனுடைய அன்பின் ஆழத்தை நம்மால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது, ஆனால் நாம் நிச்சயமாக நம்பலாம், தாழ்த்தலாம், மகிழ்ச்சியடையலாம், மேலும் நான், கர்த்தர், அவருக்குரிய மகிமையைக் கொண்டுவருவதற்காக வாழத் தேர்ந்தெடுக்கலாம் (பிலிப்பியர் 2:6. -11).

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும் நீதியுமுள்ள தேவனே , இயேசுவுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம் . எல்லாவற்றிக்காகவும் இயேசுவானவர் இருப்பதற்காகவும் , பூமியிலே வாழ்ந்தபோது அவர் செய்த யாவற்றிற்காகவும் , மகிமையிலே மறுபடியுமாய் வரும்போது அவர் செய்ய போகும் அனைத்திற்காகவும் நன்றி. இயேசுவின் நிமித்தம் நான் என் பாவங்களில் மரிக்கமாட்டேன் என்ற நம்பிக்கையை எனக்கு அளித்ததற்காக நான் உம்மை போற்றி நன்றி கூறுகிறேன். மனித மாம்சத்தில் வந்த இயேசு "நானே தேவனுடைய குமாரன் " என்று நான் நம்புகிறேன். அதிலும் அன்பான பிதாவே , நான் மரிக்கும் போது உம்முடன் என்றென்றும் வாழ்வேன் என்ற உறுதிக்காக நன்றி. எல்லாப் ஸ்தோத்திரமும் துதியும் புகழும் "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்! என்று கூறியவருக்கு உண்டாவதாக. அவருடைய நாமத்தினாலே ஜெபிக்கிறேன் ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து