இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம்முடைய கர்த்தர் மற்றும் இரட்சகராக இயேசுவைப் குறித்து நாம் அநேக நேரங்களில் பேசும் அதே வேளையில் , ​​அவருடைய சத்தத்தை எளிதாக புறக்கணிப்படுவதை பார்க்க முடிகிறது அல்லது அதைவிட மோசமான காரியம் என்னவென்றால் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டும் அவைகளின்படி செய்யாமல் அவற்றை புறக்கணிக்கிறோம் . இயேசு சொன்னதான வார்த்தைகளுக்கு நாம் கீழ்ப்படிவது என்பது நாம் அவர்மீது விசுவாசம் வைத்துள்ளோம் என்பதைக் காண்பிக்கிறது . இயேசுவானவர் சொல்வதை முட்டாள்தனமாக மீறுவது, புறக்கணிப்பது அல்லது தள்ளிவிடுவது என்பது நம்முடைய ஆண்டவர் நமக்குச் சொல்வதைச் செய்வதற்கு நாம் அவரை நம்முடைய கர்த்தராக அவரை நம்பவில்லை என்பதைக் காண்பிப்பதாகும் ! மேலே சொன்ன இந்த மனோபாவத்தை எடுப்பவர்களுக்கு நியாயத்தீர்ப்பின் போது மிகவும் கடினமான விளைவுகள் உண்டாகும் என்று இயேசு உறுதியளித்தார் (மத்தேயு 7:21-27). எனவே, ஆண்டு முடிவதற்குள் நான்கு சுவிசேஷங்களை (மத்தேயு, மாற்கு , லூக்கா, & யோவான் ) ஒவ்வொன்றையும் படிக்க உறுதி ஏற்போம். இயேசுவின் வாழ்க்கை மற்றும் போதனைகளைப் பற்றி நாம் படிக்கும்போது, ​​​​இயேசுவின் இருதயத்தைத் தேடும் ஒரு தேடலாக அதைச் செய்வோம், மேலும் அவரைப் போலவே இருக்க வேண்டும் என்று பரிசுத்த ஆவியானவர் வழிநடத்தும்போது , ​​அவரை இன்னும் நன்றாக அறிந்துகொள்ளவும், முழுமையாகவும் கீழ்ப்படிதலுடனும் அவரைப் பின்பற்ற உதவும்படி பரலோகத்தின் தேவனை கேட்போம் ( 2 கொரிந்தியர் 3:18)!

என்னுடைய ஜெபம்

அன்புள்ள தகப்பனே, நான் இயேசுவானவரை நன்றாக அறிந்துகொள்ளவும், அவருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியவும் முயல்கிறேன், இன்னுமாய் உம்முடைய பரிசுத்த வேதாகமத்தை வாசிக்கும்போது, ​​அவரே எல்லாவற்றிக்கும் மையமாக இருக்கிறார் என்று காண்கிறேன் . எனவே, என் ஆண்டவர், தேவனுடைய குமாரன், மனுஷகுமாரன், என் இரட்சகராகிய இயேசுவின் நாமத்தினாலே என்னுடைய அனுதின வாழ்க்கையின் கீழ்ப்படிதலுக்காக ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து