இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஜெஸ்ஸி பிரவுன் பவுண்டின் ஓர் பழைய பாடலின் வார்த்தைகள், "இன்று சொல்லமாட்டீர்களா?" அதைச் சிறப்பாகச் சொல்லுங்கள்: "அவருடைய பிரசன்னத்தின் வெளிச்சம் உங்கள் வழியை பிரகாசமாக்கியிருந்தால், அப்பொழுது இன்று அந்த வார்த்தையை சொல்லமாட்டீர்களா?" தேவனின் நற்குணம் மற்றும் கிருபையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய ஒருவரை ஜெபத்துடன் தேர்ந்தெடுக்கவும், பின்னர் தயவுசெய்து, அன்புடன், அந்த நபருடன் இயேசுவை குறித்து பகிர்ந்து கொள்ளுங்கள். தேவனைப் புகழ்ந்து துதிக்கும் இருதயம் அவரைத் துதிப்பது மாத்திரமல்லாமல் , மற்றவர்களையும் அவ்வாறு துதிக்கும்படி வழிநடத்தும். இயேசுவைப் பற்றி கேள்விப்பட்ட அந்திரேயாவை விட சிறந்த உதாரணத்தை என்னால் நினைக்க முடியாது. அந்திரேயா செய்த முதல் காரியம், தன் சகோதரன் சீமோன் பேதுருவிடம் சொல்லி, அவனை இயேசுவிடம் அழைத்து வந்ததே (யோவான் 1:40-42).

என்னுடைய ஜெபம்

ஆண்டவரே, என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து இருந்து உம்மைப் போற்றி புகழ்கிறேன். கூடுதலாக, அன்பான பிதாவே , இயேசுவைப் பின்பற்றுவதன் மூலம் உம்மை இன்னும் முழுமையாகவும், அதிகமாகவும் அறிந்துகொள்ளவும், உம்மை கனப்படுத்தவும் நான் முயல்வதால், இன்று என்னை ஆசீர்வதித்தருளும் . நான் மற்றவர்களை இயேசுவிடம் வழிநடத்த முயலும் போது உமது வல்லமையும் கிருபையும் என்னுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவை யாவற்றையும் இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து