இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சுவிசேஷத்தை பிரசங்கித்து போதிப்பவர்களில் சிலர் ஏமாற்றுக்காரர்களாகவும் கலகக்காரர்களாகவும் இருக்கும்போது, ​​பெரும்பாலான தேவனின் ஊழியர்கள் கடினமாக உழைக்கிறார்கள் மற்றும் பொருளாதார ரீதியாக அரிதாகவே செலவழிக்கிறார்கள் என்பது நமது நவீன உலகின் மிகப்பெரிய வருத்தங்களில் ஒன்றாகும். நாம் குறைவான வருமானம் பெறும் ஊழியர்களையும் மற்றும் மறக்கப்பட்ட தேவனுடைய ஊழியரையும் கண்டுபிடித்து, தேவன் உங்களுக்கு வழங்கிய ஆசீர்வாதங்களில் சிலவற்றை ஏன் அவர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது? ஒரு அன்பு நிறைந்த வார்த்தையினால் தேற்றுவது , குறிப்பிட்ட பாராட்டு மற்றும் நன்றியுள்ள ஒரு வார்த்தை , அல்லது ஒரு ஆச்சரியமான ஒரு காணிக்கை ஆகியவை தேவனின் ஊழியர்களில் ஒருவரை உயர்த்துவதற்கும், இன்னும் பெரிய ஊழியத்தை செய்ய அவர்களை மேம்படுத்துவதற்கும் இப்படிப்பட்ட அற்புதமான விஷயங்களைச் செய்யலாம்.

என்னுடைய ஜெபம்

பரிசுத்த பிதாவே , எங்கிருந்தாலும் இயேசுவை குறித்த நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ளும் உமது ஊழியர்களுக்காக நன்றி செலுத்துகிறேன் . அப்பா, இந்த நபர்களுக்கு நான் குறிப்பாக நன்றி சொல்ல விரும்புகிறேன்: ___(நீங்கள் விரும்பும் நபரின் பெயரை குறிப்பிடவும் )_______________ தயவுக்கூர்ந்து அவர்களுக்கு நல்ல ஆரோக்கியம், உண்மையுள்ள மற்றும் அன்பான குடும்பம் மற்றும் உம் ஊழியத்தை உம் சித்தத்தின்படி அவர்கள் அர்ப்பணிப்போடு சிறந்த முறையில் செய்ய அவர்களுக்கு தேவையான பொருளாதார தேவையை கொடுத்தருளும். உமது கிருபையின் ஊழியர்களை ஆசீர்வதிக்கவும் ஊக்குவிக்கவும் என்னைப் எடுத்து பயன்படுத்துங்கள். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து