இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கிருபை நம்மை பாவம் மற்றும் மரணத்தின் சட்டத்திலிருந்து விடுவிக்கிறது. எவ்வாறாயினும், அந்த சுதந்திரத்தை எப்பொழுதும் நம் சுயநலத்திற்காக பயன்படுத்தப்படக்கூடாது - எதிர்த்து நிற்க்கவும் அல்லது சுய திருப்திக்காக அல்ல. மாறாக, இயேசுவைப் போலவே நாம் நமது சுதந்திரத்தை மீட்புக்காக பயன்படுத்த வேண்டும் (பிலிப்பியர் 2:5-11). பாவத்தின் அடிமைத்தனத்திலும் தேவனை பற்றிய தவறான எண்ணங்களிலும் இன்னும் சிக்கியிருக்கும் மற்றவர்களுக்கு உதவ அந்த சுதந்திரத்தை நாம் தானாக முன்வந்து உபயோகிக்கலாம் . கிறிஸ்துவைப் போல மறுரூபமாவதற்க்கு நாம் பரிசுத்த ஆவியின் சுதந்திரத்தைப் பயன்படுத்தலாம் (2 கொரிந்தியர் 3:17-18). இயேசுவை அறியாதவர்களில் சிலரை கர்த்தருக்கும் அவருடைய கிருபைக்கும் நாம் உண்மையாக நம்மை முழுமையாக சமர்ப்பிக்கலாம் (1 கொரிந்தியர் 9:20-23). மகிழ்வதற்கும், மீட்பதற்கும், ஆசீர்வதிப்பதற்கும் நமது சுதந்திரத்தைப் எப்பொழுதும் பயன்படுத்த ஆயத்தமாய் இருப்போம் .

என்னுடைய ஜெபம்

மகாபெரிய மற்றும் வல்லமையுள்ள ஆண்டவரே, உமது கிருபையினால் என்னை விடுவித்ததற்காக நன்றி. அன்புள்ள பிதாவே , இந்த ஈவை நீர் எனக்கு தருவதற்கு மிகப் பெரிய விலையை கொடுத்தீர் என்பதை நான் அறிவேன் - உம்முடைய நேச குமாரன் இயேசு கிறிஸ்துவின் அவமானகரமான சித்திரவதை, மரணம் மற்றும் அடக்கம் ஆகிய காரியங்கள் அந்த விலை என்று அறிவேன் . ஆனால் நீர் அவரை மரணத்திலிருந்து ஜெயமாக எழுப்பினீர்கள்! ஆகவே, அன்பான பிதாவே , இன்னும் இயேசுவில் தங்கள் விடுதலையையும் சுதந்திரத்தையும் காணாத மற்றவர்களை ஆசீர்வதிக்க என்னை எடுத்துப் பயன்படுத்தியருளும் , இதனால் பரிசுத்த ஆவியானவர் அவர்களை இயேசுவோடு வெற்றிகரமான புதிய வாழ்க்கைக்கு உயர்த்த முடியும். என் இரட்சகராகிய இயேசுவின் நாமத்தினாலே இவைகளை கேட்டு ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து