இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசுவின் அடையாளத்தைப் பற்றி பலர் பலவிதமான கருத்துக்களைக் கொண்டிருந்தனர் மற்றும் இன்னும் சிலர் முடிவுக்கு வராமல் உள்ளனர். எவ்வாறாயினும், உண்மையான பிரச்சனை என்னவென்றால், நீங்கள் இயேசுவைக் குறித்து என்ன நம்புகிறீர்கள் மற்றும் இயேசு தன்னை யார் என்று வெளிப்படுத்துகிறார். இயேசுவை தேவனுடைய குமாரன், கர்த்தர் மற்றும் கிறிஸ்து, இஸ்ரவேலின் மேசியா என்று நீங்கள் தீர்மானிப்பது உங்களுக்கும் (ரோமர் 10:9-13) மற்றும் நீங்கள் அவரை குறித்து சொல்ல முயல்பவர்களுக்கும் இந்த கருத்துக்கள் எல்லாவற்றையும் குறிக்கிறது. எனவே, தயவு செய்து இயேசு தம் சீஷர்களிடம் கேட்கும் கேள்வியை மீண்டும் கேளுங்கள்: "நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்?" உங்கள் பதில் பேதுருவின் அதே பதிலை போல இருக்க உங்களுக்காக ஜெபிக்கிறேன் : "நீர் தேவனுடைய கிறிஸ்து( மேசியா)என்றான்" .

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பரலோகத்தின் பிதாவே , என் கர்த்தராகிய இயேசு என் ஆண்டவர் (பிலிப்பியர் 2:10-11), இரட்சகர் (யோவான் 4:42), சிநேகிதன் (யோவான் 4:14-15), மற்றும் எங்கள் குடும்பத்தின் மூத்த சகோதரர் (எபிரெயர் 2:11, 14) ஆகிய இயேசுவுக்கு நன்றி . உம்மை எங்களுக்கு வெளிப்படுத்த அவரை அனுப்பியதற்காக நன்றி செலுத்தி துதிக்கிறேன் . அவருடைய மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றின் மூலமாய் எங்கள் மீதான உம் அன்பை வெளிப்படுத்தியதற்காக நன்றி. இயேசு கிறிஸ்து, நீர் தேர்ந்தெடுத்த மேசியா, நித்திய பிதாவின் குமாரன் மற்றும் பாவத்திலிருந்து விடுதலை , மன்னிப்பு, சுத்திகரிப்பு மற்றும் முழுமையான இரட்சிப்பைக் கொண்டு வரக்கூடிய ஒரே இரட்சகர் அவரே என்று முழுநிச்சயமாய் விசுவாசித்து நன்றி கூறுகிறேன் ! இயேசுவின் வல்லமையான நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து