இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஒருமுறை எனது அலுவலகத்தில் ஒரு இறந்த மனித சரீரம் ஒரு டிரெய்லரை இழுத்துச் செல்லும் படத்தைப் பார்த்தேன்,அதில் ஒரு வாசகம் இப்படி எழுதியிருந்தது "உங்களால் அதை எடுத்துச் செல்ல முடியாது என்று யார் கூறுகிறார்கள்?" இது நகைச்சுவையாக இருந்தாலும், அது தவறு: மிகத் தவறு. அதுதான் படத்தின் மையமான கருத்து ! நாம் இறந்த பிறகு நம்மால் எடுத்துச் செல்ல முடியாத விஷயங்களைப் பின்தொடர்வதினால் நம் ஆத்துமாவை இழந்தால் நமக்கு என்ன லாபம் உண்டு ? அதிக பொருள், புகழ், செல்வம் மற்றும் அதிகாரம் ஆகியவை நித்தியமான வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான ஒரு பகுதியை மட்டும் இழப்பது மேன்மையானதா ? இல்லை, இல்லவே இல்லை!

என்னுடைய ஜெபம்

அன்பான பிதாவே , உண்மையிலேயே மேன்மையானது மற்றும் நித்தியமாக நிலைத்து நிற்கும் காரியங்களில் அதிக கவனம் செலுத்த எனக்கு உதவுங்கள். என் ஆசீர்வாதங்களையும் செல்வாக்கையும் பயன்படுத்தி, உம்மை மகிமைப்படுத்தவும், மற்றவர்களை இயேசுவிடம் நெருக்கமாக வழிநடத்தவும் என் இருதயத்தை வழிநடத்தும் . இந்த விஷயங்களை அடுத்த வாழ்க்கையில் கொண்டு செல்ல விரும்புகிறேன். இதை இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து