இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நீங்கள் இதை தெரிந்து கொள்ள வேண்டும்! இயேசுவானவர் ஒரு நாளிலே மறுபடியுமாய் திரும்பி வருகிறார்! நீங்கள் அதற்கு ஆயத்தமாய் இருக்கிறீர்களா ? நீங்கள் மணவாளனின் வருகைக்காக காத்திருக்கிறீர்களா? நீங்கள் ஆர்வமாக அவரை எதிர்கொண்டு போக உள்ளீர்களா? அவருடைய வருகையை ஆவலுடன் எதிர்நோக்குபவர்களுக்கு இரட்சிப்பும் கர்த்தருடைய மகிமையும் காத்திருப்பதால் நீங்களும் நிச்சயமாக அங்கு இருப்பீர்கள் என்று விசுவாசிக்கிறேன் (ரோமர் 8:19, 23; 1 கொரிந்தியர் 1:7; கலாத்தியர் 5:5). பவுல் பிலிப்பியர்களிடம் சொல்வது போல : நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார். {பிலிப்பியர்-3:21}

என்னுடைய ஜெபம்

ஆண்டவராகிய இயேசுவே வாரும் ! உம்முடைய மணவாட்டி உம் வருகைக்காக காத்திருக்கிறார்கள்! எல்லா மகிமையும் என்றென்றும்உமக்கே உண்டாயிருப்பதாக ! ஆமென். (ஜெபம் 1 கொரிந்தியர் 16:22 & வெளிப்படுத்துதல் 21:2, 9; 22:17 இலிருந்து மாற்றப்பட்டது.)

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து