இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கர்த்தர் தம் ஜனங்களிடம் திரும்பத் திரும்பப் பேசியதை நெகேமியா உணர்ந்தார். மெய்யான தீர்க்கதரிசிகள் தேவனின் பரிசுத்த ஆவியானவர் அவர்களை வழிநடத்தினது போல பேசினார்கள். தேவன் தம்முடைய மக்களை எப்பொழுதும் நேசித்தார், ஆசீர்வதித்தார், பாதுகாத்தார், ஆனாலும் அவருடைய ஊழியர்களான தீர்க்கதரிசிகள் மூலம் வெளிப்படுத்தப்பட்ட அவருடைய சித்தத்தை அவர்கள் அடிக்கடி புறக்கணித்தார்கள். மக்கள் தங்கள் தேவனாகிய ஆண்டவரை கைவிட்டனர் அதினால் தங்கள் அழிவுக்கு வழிவகுத்தனர் ! அதே விஷயத்தை நம்மை குறித்து சொல்ல அனுமதிக்கக்கூடாது. நம்முடைய தேவனுக்கும் , பிதா அனுப்பிய அவருடைய நேச குமாரனாகிய இயேசுவுக்கும் அவர்களுடைய வார்த்தைக்கு எப்பொழுதும் கவனம் செலுத்துவோம். கர்த்தராகிய இயேசு நம்மீது பொழிந்த பரிசுத்த ஆவியானவருக்கு செவி சாய்ப்போம், கீழ்ப்படிவோம், அப்பொழுது அவர் நமக்குள் ஜீவன் உள்ளவராய் இருந்து நம்மை வழிநடத்துவார். ஆவியானவர் நம் இருதயத்துடனும் மற்றும் பரிசுத்த வேதாகமத்தின் மூலமாகவும் பேசுகிறார். பரிசுத்த ஆவியானவர் நம் தேவனுடைய வழிகளில் நம்மை வழிநடத்த விரும்புகிறார்.

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே அப்பா பிதாவே , நாங்கள் உம்மைப் போற்றுகிறோம்! தயவு செய்து உம் மீதான எங்கள் அன்பையோ அல்லது உமக்கு கீழ்ப்படிதலுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும் என்ற எங்கள் இருதயத்தின் வாஞ்சையை விட எங்களின் வாழ்க்கை அமைய ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்! உமது பரிசுத்த ஆவியின் மூலமாகவும், உமது பரிசுத்த வேதாகமத்தின் வார்த்தையின் மூலமாகவும் எங்களை வழிநடத்தி எங்கள் இருதயத்துடனே பேசும் . நாங்கள் உமக்கு எங்கள் இருதயத்தை முற்றிலுமாய் ஒப்புவிக்கிறோம் , உமக்கு கீழ்ப்படிந்து, எங்கள் ஆண்டவராகவும் இரட்சகராகவும் இயேசுவைப் பின்பற்ற தயாராக இருக்கிறோம். அவருடைய நாமத்தினாலே ஜெபிக்கிறோம். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து