இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கெத்செமனே தோட்டத்தில், யூதாஸ் இயேசுவைக் காட்டிக் கொடுத்தார், ஜெப ஆலய வீரர்கள் அவரைக் கைது செய்தனர். பேதுரு கர்த்தரைக் காப்பாற்ற ஒரு பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனின் வேலைக்காரனுக்கு எதிராக அதை பயன்படுத்தினான் (மத்தேயு 26:47-51). இயேசு பேதுருவிடம், " உன் பட்டயத்தை திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள். " (மத்தேயு 26:52) என்று கூறினார். பொல்லாங்கு பொல்லாங்கை தூண்டுகிறது, மேலும் பொல்லாங்கு செய்பவர்கள் தங்கள் தலையின் மேல் பொல்லாங்கின் கசப்பான பதிலைச் சுவைக்க வேண்டியதில்லை. தேவனின் ஞானியின் ஞானியாகிய சாலமோன் இந்த வசனத்தில் அதையே கூறுகிறார், ஆனால் ஒரு முக்கியமான கருத்தை உள்ளடக்கி கூறுகிறார் . நீதிமான்களுக்கு ஆசீர்வாதம் வரும். நீதியை விதைத்தாலும், வன்முறையை விதைத்தாலும், எதை விதைக்கிறோமோ அதையே அறுப்போம் என்று கூறுகிறார்!

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள தேவனே, தயவுசெய்து என்னை நீதியினால் ஆசீர்வதியும் - உமது கிருபையினாலும் இரக்கத்தினாலும் மாத்திரமல்ல , உமது பரிசுத்த ஆவியின் மறுரூபமாக்குதலின் வல்லமையினால் என் இருதயத்தை மாற்றியருளும் . மேலும், அன்பான பிதாவே , தாவீது இராஜாவின் வேண்டுதலைக் கொண்டு எங்கள் ஜெபத்தை நிறைவு செய்கிறோம் : துன்மார்க்கனுடைய பொல்லாங்கை ஒழியப்பண்ணும்; நீதிமானை ஸ்திரப்படுத்துவீராக; நீதியுள்ளவராயிருக்கிற தேவரீர் இருதயங்களையும் உள்ளிந்திரியங்களையும் சோதித்தறிகிறவர். (சங்கீதம் 7:9). இந்த மன்றாட்டை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபிக்கிறோம். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து