இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஜனாதிபதிகள், மன்னர்கள், பிரதம மந்திரிகள் மற்றும் ஆட்சியாளர்களுக்கு "புத்திசாலி" மற்றும் இராஜதந்திர ஆலோசகர்கள் உள்ளனர். அநேகர் தங்களைச் அதிகாரம் படைத்தவர்கள் மற்றும் செல்வந்தர்களை சுற்றியிருக்க , அவர்கள் கேட்க விரும்புவதைக் கூறுவார்கள். இருப்பினும், தேசங்களுக்கு ஒரே ஒரு ராஜா மாத்திரமே ! ஒருவரே மெய்யானவர் இறுதியில் பூமியிலுள்ள அனைத்து மக்களையும் ஆளுகை செய்வார் . அவர் ஒப்பிட முடியாதவர் மற்றும் நிகரானவர் இவ்வுலகில் ஒருவரும் இல்லை. அவருடைய நாமம் "யாவ்வே", நான் மகா பெரியர் , சர்வவல்லமையுள்ள கர்த்தாதி கர்த்தர் , எங்களுக்கு அப்பா பிதாவே என்று அழைக்க இயேசு நமக்குக் கற்பித்த ஒரே மெய்யான மற்றும் ஜீவனுள்ள தேவன் . அவர் உண்டாக்கின அனைத்து பெரிய மற்றும் சிறிய ஜீவ ராசிகளும் ஒரு நாளிலே தேவனை பயத்துடனும் பக்தியுடனும் கனப்படுத்துவதுப் போல இன்றும் அவரை அப்படியே சேவிக்க வேண்டும். ஒவ்வொரு தேசத்திலுள்ள எல்லா மக்களும் ஒரு நாள் அவர்கள் இன்று போலவே ஒரு நாளிலே தேவனை சேவிப்பார்கள் . எனவே, இயேசுவின் சீஷர்களாகிய நாம் அதை இன்றே செய்வோம் என்பதை உறுதி செய்வோம்!

என்னுடைய ஜெபம்

என் தகப்பனும் என் தேவனுமாகிய நீர் எல்லா மகிமைக்கும் வல்லமைக்கும் பாத்திரர் . நிஜத்திலோ அல்லது என் இருதயத்திலோ உமக்கு ஒப்பானவர் இவ்வுலகிலே எப்பொழுதும் இல்லை. இவ்வளவு வல்லமையும், மாட்சிமையும்,பராக்கிரமும் உம்மிடம் இருக்கும்போது ஒன்றுக்கும் உதவாத என் மீது ஏன் இவ்வளவு அன்பும், அக்கறையும் காண்பிக்க வேண்டும்? உம் அளவற்ற கிருபையினால் அடியேனை உம் இராஜ குடும்பத்தில் புத்திர சுவிகாரம் தந்த்ததற்க்காக உமக்கு நன்றி. என் வாழ்க்கையில் நீர் பொழிந்த கிருபை மற்றும் அன்பிற்காக நான் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன் . உம்மைப் போல இவ்வுலகிலே எனக்கு யாரும் இல்லை என்று அறிவிக்கும் ஒரு வாழ்க்கையை வாழ விரும்புகிறேன்! இயேசுவின் நல்ல நாமத்தினாலே உம்மைப் போற்றி துதித்து நன்றி செலுத்தி ஜெபிக்கிறேன்,ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து