இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு செல்வாக்கு வட்டத்தை கொடுத்துள்ளார், நம் வாழ்க்கை மற்றவர்களுக்கு நன்மைக்கேதுவாகவோ அல்லது தீமைக்கேதுவாகவோ தாக்கத்தை உண்டுப்பண்ணும் . இதேபோல், நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களால் பாதிக்கப்படுகிறோம், அவர்களில் சிலர் நம்மிடையே காணப்படும் பிரச்சனைகளையும் தவறுகளையும் பார்க்கவும் சமாளிக்கவும் உதவுகிறார்கள், மற்றவர்கள் நம்மை பாவச் சேற்றில் மட்டுமே இழுக்கிறார்கள். இருப்பினும், நாம் ஒழுக்கத்தையும் கண்டிப்பையும் நிராகரித்தால் அல்லது புறக்கணித்தால், நமக்கு நாமே தீங்கு விளைவிப்பது மாத்திரமல்ல , மற்றவர்களையும் வழிதவறச் செய்து விடுகிறோம் - மற்றவர்களையும் நம்முடன் பாவச் சேற்றில் இழுக்கிறோம். நமது தேர்வுகள் நமது இலக்கை மாத்திரம் தீர்மானிப்பதில்லை; மாறாக நம் நன்மை அல்லது தீமையின் காரியம் மற்றவர்களின் வாழ்க்கையை கணிசமாக பாதிக்கிறது !

என்னுடைய ஜெபம்

அன்பான தேவனே , உம்முடைய சத்தியம் , கண்டிப்பு மற்றும் ஞானத்தின் மீதான முட்டாள்தனமான ஆணவம் மற்றும் சோம்பலினால் உண்டான அலட்சியமான நேரத்தை தயவுசெய்து மன்னியுங்கள். நீர் என் வாழ்க்கையை மற்றவர்கள் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை உணர்ந்ததன் மூலம் நீர் என்னை தாழ்த்திக்கொள்ள செய்தீர் . எனவே, அன்பான பிதாவே , அந்தச் செல்வாக்கைப் பயன்படுத்தி, உம் வாழ்க்கையின் வழியில் மற்றவர்களை இரக்கத்துடனும் பணிவாகவும் வழிநடத்த எனக்கு அதிகாரம் தாரும் . இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து