இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனே எங்கள் புகழ்ச்சி ! செங்கடலைப் பிரித்து, வனாந்தரத்தில் உள்ள இஸ்ரவேலர்களுக்கு மன்னாவை வழங்கிய தேவன் , நமக்கும் நமக்குள்ளும் மிக ஆச்சரியமான அற்புதங்களைச் செய்த தேவன் அவரே - அவர் நம் சுயநலம் நிறைந்த இருதயத்தை தம் விருப்பத்தைச் செய்யத் திருப்பினார், நம் வாழ்க்கையைத் தம்முடைய நித்தியத்துக்குரிய கிரியையை இவ்வுலகிலே செய்ய திருப்பினார், மேலும் இயேசுவைப் போல மாற பரிசுத்த ஆவியின் கிரியையின் மூலமாய் நம்மை மறுரூபமாக்கினார் ! நமக்குள்ளும் நமக்காகவும் இவை அனைத்தையும் செய்தபின், தேவனானவர் நம் இருதயங்களிலே அவர் வைத்த காரியங்களைச் செய்ய நமக்கு ஈவுகளை கொடுத்து , அதிகாரம் அளித்துள்ளார். அவரே நம் ஸ்தோத்திரத்துக்கு பாத்திரர் . நாம் தொழுதுக்கொள்ளுவதற்கு தகுதியுடையவர் அவரே நம்மை தொழுதுக்கொள்ள பாத்திரராக மாற்றியவர் !

என்னுடைய ஜெபம்

அப்பா பிதாவே , எல்லா மகிமைக்கும், கனத்துக்கும் , புகழ்ச்சிக்கும் தகுதியானவர். உங்கள் மக்களாகிய இஸ்ரவேலின் வரலாறு முழுவதும் நீர் பெரிய மற்றும் வல்லமையுள்ள செயல்களைச் செய்திருக்கிறீர்கள் - அவர்களில் பெரும்பாலோர் மக்கள் மிகவும் எளிமையானவர்கள், அவர்களையே நீர் எடுத்துப் பயன்படுத்தியவர். இன்று எங்கள் உலகில் உம்முடைய கிரியையை செய்ய எங்களைப் எடுத்துப் பயன்படுத்தியதற்காக நன்றி. அன்பான பிதாவே , உமது நித்தியப் பணியைச் செய்ய எங்களைப் போன்ற சாதாரண மக்களைப் பயன்படுத்தியதற்காக நாங்கள் உம்மைப் போற்றுகிறோம். எங்கள் இராஜாவாகிய இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து