இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனுடைய வாக்குத்தத்ததின் அடிப்படையில், அனுதினமும் இரண்டு மெய்யான காரியங்கள் நமக்கு முன்பாக வைக்கப்படுகிறது : 1. இந்த நாள் முடிந்து நாளை வரும், பூமி அதின் பாதையில் சுற்றும் , மற்றும் பருவங்கள் அவற்றின் நியமிக்கப்பட்ட வரிசையில் கடந்து செல்லும். 2. அல்லது தேவன் உண்டாக்கின காலங்களுக்கு தம்முடைய நியமிக்கப்பட்ட கட்டளைக்கு இடையூறு செய்வார், ஏனென்றால் இயேசுவானவர் மறுபடியுமாய் வருவார், அவருடைய மகிமையில் நித்தியக்காலமாய் பங்கு கொள்வோம். சூரியன் காலையில் உதயமாவதையும் மாலையில் மறைவதையும் விட இந்த சத்தியம் மிகவும் உறுதியானவை. எப்படியிருந்தாலும், தேவனுடைய வாக்குத்தத்தங்கள் நம்முடைய பயம் மற்றும் நமக்கு தீங்கு விளைவிக்கும் சாத்தானின் நோக்கங்களை வென்றெடுக்கின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவனுடைய கிருபையினால் , ஒரு புதிய நாளை நாம் வெல்வோம்!

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள பிதாவே , உம்முடைய மகத்தான மற்றும் அற்புதமான வாக்குறுதிகளுக்காக நன்றி. நாளை வரும் என்று நான் நம்புகிறேன், ஏனென்றால் உம்மையும், நீர் உண்மையுள்ளவர் என்றும் நான் அறிவேன். நான் என்றென்றும் உம்முடன் வாழும்படியாய் இயேசுவானவர் மறுபடியும் வந்து என்னை நித்திய வீட்டிற்கு அழைத்துச் செல்வார், அல்லது உமக்காக வாழ ஒரு புதிய நாளை நீர் என்னுடைய வாழ்க்கையில் கொண்டு வருவீர் என்று நான் முழுநிச்சயமாய் நம்புகிறேன். எப்படியிருந்தாலும் நான் வெற்றி பெறுகிறேன். நீர் எந்த நாளை அடியேனுடைய வாழ்வில் கொண்டு வர விரும்புகிறீர்களோ, அந்த நாளிலே நான் உம்மை மாத்திரம் கனப்படுத்துவேன் உறுதியளிக்கிறேன்! இவை யாவற்றையும் மறுபடியுமாய் வரப்போகிறவரும் மற்றும் ஜெயம்பெற்றவருமாகிய ஆண்டவரின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன், ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து